முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி போலீசார் தீவிர விசாரணை


முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2023 7:15 PM GMT (Updated: 11 Aug 2023 7:15 PM GMT)

முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பர் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 60).கடந்த மாதம் இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் சண்முகநாதனுக்கு பல லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள் கிடைத்துள்ளது என்றும் அதனை பெறுவதற்கு சுங்க வரி கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய சண்முகநாதன் செல்போனில் பேசிய நபர் கூறிய வங்கி கணக்கில் 4 தவணைகளில் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். பணத்தை பெற்ற பின்பு அவர் சண்முகநாதனின் தொடர்பை துண்டித்து விட்டாராம்.

இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டது அறிந்த சண்முகநாதன் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story