கல்லூரி பேராசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி


கல்லூரி பேராசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி
x

கல்லூரி பேராசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவர், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம், தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பி அந்த பேராசிரியர் பல்வேறு தவணைகளாக அவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். அதன்பிறகு கொடுத்த பணத்துக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே கொடுத்த பணத்தை பேராசிரியர் திருப்பி கேட்டுள்ளார். இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததுடன் பேராசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்தனர்.


Next Story