ரூ. 200 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதி, திருப்பதி போல் இனி திருச்செந்தூர் - அமைச்சர் சேகர் பாபு


ரூ. 200 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதி, திருப்பதி போல் இனி திருச்செந்தூர் - அமைச்சர் சேகர் பாபு
x

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் மேம்படுத்தப்படும் என சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை,

200 கோடி ருபாய் செலவில் திருப்பதி கோயிலைப் போன்று திருச்செந்தூர் கோவிலில் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "திருச்செந்தூருக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலின் உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் வந்தால் கூட பிரத்யேக வசதி ஏற்படுத்தி அவர்களை வரிசையாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

திருச்செந்தூர் கோவிலில் மட்டுமின்றி திருத்தணி, சமயபுரம் ,ராமேஸ்வரம், பழனி போன்ற ஊர்களில் உள்ள திருக்கோவில்களிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் " என அவர் தெரிவித்தார்.


Next Story