சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.3½ லட்சத்துக்கு நிலக்கடலை காய் விற்பனை


சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.3½ லட்சத்துக்கு நிலக்கடலை காய் விற்பனை
x

சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.3½ லட்சத்துக்கு நிலக்கடலை காய் விற்பனை செய்யப்பட்டது.

கரூர்

சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 53.79½ குவிண்டால் எடை கொண்ட 176 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.75.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.19-க்கும், சராசரி விலையாக ரூ.74.10-க்கும் என ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.

அதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 7,912 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.24.82-க்கும், குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.20-க்கும், சராசரி விலையாக கிலோ ரூ.23.50-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 552-க்கு ஏலம் போனது.


Next Story