சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.74½ லட்சம் காணிக்கை


சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.74½ லட்சம் காணிக்கை
x

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.74½ லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்கள், கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் 2 முறை திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் 2-வது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்களை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில் காணிக்கையாக ரூ.74 லட்சத்து 62 ஆயிரத்து 695 ரொக்கமும், 2 கிலோ 515 கிராம் தங்கமும், 3 கிலோ 990 கிராம் வெள்ளியும், 150 வெளிநாட்டு பணம் மற்றும் 936 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.


Next Story