மணல் கடத்தல்; 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை,
திருநாவலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் திருநாவலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திக்கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire