கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சட்டபூர்வமாக ஓய்வூதிய தொகை ரூ.7,850, அகவிலைப்படி 3 சதவீதம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காலி தட்டேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒரு பகுதியாக பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹென்றி தலைமை தாங்கினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் உஷாராணி, ஒன்றிய செயலாளர் தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், மாவட்ட தலைவர் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


Next Story