படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - கலெக்டர் தகவல்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையினை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்து 5 வருடங்களும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வருடமும் போதுமானது.

உதவித்தொகை பெற தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலை வாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து 31-08-2023-க்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தை செலுத்த வரும் போது வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கொண்டு வர வேண்டும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகையினை பெற்று பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story