மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவர் பலி


மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவர் பலி
x

மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

திருச்சி

மணப்பாறை:

மின்சாரம் பாய்ந்து சாவு

மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டியை சேர்ந்தவர் சாந்தகுமார்(வயது 17). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு இவர் அங்குள்ள வயல் பகுதிக்கு நடந்து சென்றார். வழியில் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வழியாக சாந்தகுமார் சென்றபோது மின்வேலியில் சிக்கினார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கதறிய உறவினர்கள்

இது பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார், அங்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சாந்தகுமார் உயிரிழந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள், அவரது உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அதை பார்த்தவர்களையும் கண் கலங்க செய்தது.

மின்வேலியில் சிக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story