கனமழை: பெரம்பலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


கனமழை: பெரம்பலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x

பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

பெரம்பலூர்,

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதனிடையே, பெரம்பலூர், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story