காரில் கடத்திய 150 லிட்டர் சாராயம் பறிமுதல்


காரில் கடத்திய 150 லிட்டர் சாராயம் பறிமுதல்
x

கல்வராயன்மலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காரில் கடத்திய 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலையில் இருந்து கல்வராயன்மலை அடிவாரம் நோக்கி காரில் சாராயம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வெள்ளிமலை முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்தனர்.

உடனே காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து காரில் இருந்த 2 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கள்ளக்குறிச்சி ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், முத்து என்பதும், தப்பி ஓடியது கொட்டபுத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்றும், கல்வராயன்மலை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காரில் 150 லிட்டர் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், முத்து ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து காருடன் 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏழுமலையை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story