புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது


புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது
x

புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வியாபாரி போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசாருக்கு விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு ெசன்ற போலீசார், அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடம்பூர் மெயின்ரோட்டை சேர்ந்த சாமிநாதன்(வயது 60) என்பவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது, அங்கு விற்பனை செய்வதற்காக 2 மூட்டைகளில் வைத்திருந்த சுமார் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் ெசய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story