செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், கோபிநாத் ஆகிய 2 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார், ஜெயச்சந்திரன் ஆகிய 5 பேரும் ஆஜராகவில்லை.

அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story