மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு
x

மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று குடும்ப நல வழக்குகளுக்கு என தனித்துவமான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.இந்த மக்கள் நீதிமன்றம் கரூர் நீதிமன்றத்தில் ஒரு அமர்விலும், குளித்தலை நீதிமன்றத்தில் ஒரு அமர்விலும் என 2 அமர்வுகளில் நடைபெற்றது.கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

கரூர், குளித்தலை என 2 அமர்வுகளில்150 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 51 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட தொகை ரூ.4 கோடியே 57 லட்சத்து 18 ஆயிரத்து 846 ஆகும். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.


Next Story