ராமேசுவரம்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு


ராமேசுவரம்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
x

இந்தியா - இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட துறை ரீதியான அறிவிப்புகள் வருமாறு:-

* மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படும்.

* ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல புறவழிச்சாலைகள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* கரூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் இடையே போக்குவரத்துக்கு ஏற்ப புதிய இணைப்பு உருவாக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

* இந்தியா-இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை, ராமேசுவரம்-தலைமன்னார் (50 கி.மீ); ராமேசுவரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ராமேசுவரம் சிறுதுறைமுக பகுதியில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க சோதனை மையங்கள் ஆகியவற்றை உருவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.


Next Story