சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்உண்டியல் காணிக்கை ரூ.57¼ லட்சம்


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்உண்டியல் காணிக்கை ரூ.57¼ லட்சம்
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.57 ¼ லட்சம் கிடைத்துள்ளது.

பெரம்பலூர்

3 மாதங்களுக்கு ஒருமுறை...

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்க, வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். மேலும் அந்த உண்டியல்கன் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவதும் வழக்கம். அதன்படி நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்க, வெள்ளி, வெளி நாட்டு பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலின் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், பெரம்பலூர் சரக ஆய்வாளர் தீபாதேவி, மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.

ரூ.57¼ லட்சம் காணிக்கை

கோவில் உண்டியல்களில் இருந்து வருவாயாக ரூ.57 லட்சத்து 16 ஆயிரத்து 307 ரொக்கமும், 462 கிராம் தங்கமும், 1,205 கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 168 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த மே மாதம் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story