உள்ளாடைகளில் மறைத்து துபாயில் இருந்து ரூ.57 லட்சம் தங்கம் கடத்தல்


உள்ளாடைகளில் மறைத்து துபாயில் இருந்து ரூ.57 லட்சம் தங்கம் கடத்தல்
x

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் துபாயில் இருந்து உள்ளாடைகளில் மறைத்து கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.57 லட்சம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று அவரை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். இதையடுத்து இவரிடம் இருந்து ரூ.56 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 110 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story