மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினி - பாஜகவினர் எதிர்ப்பு...!


மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினி - பாஜகவினர் எதிர்ப்பு...!
x

தேனியில் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினியை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

தேனியில் மத்திய அரசுக்கு எதிராக சமூக ஆர்வலர் நந்தினி தனது சகோதரியுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதுகுறித் தகவல் அறிந்து அங்குவந்த பாஜகவினர் சமூக ஆர்வலர் நந்தினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமூக ஆர்வலர் நந்தினியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர் நந்தினி மற்றும் அவரது சகோதரியையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.




Next Story