முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சந்தனகாப்பு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ெநாய்யல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதியில் பல்வேறு முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story