நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு


நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு
x

சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18-ந் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து பெரும் அவதிக்குள்ளாகினர். இதில், தங்களது முக்கிய ஆவணங்களை மக்கள் பறிகொடுத்தனர்.

இதனால், நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது,

வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) சிறப்பு முகாம் தொடங்க உள்ளது. இவ்வாறு கூறினார்.


Next Story