கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தாம்பரம் – மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தாம்பரம் – மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

தாம்பரத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த நாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வருகிற 23 (நாளை) மற்றும் 30-ம் தேதிகளில் தாம்பரம் – மங்களூரு (06129) இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த நாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும். இந்த ரெயிலானது தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story