ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்


ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சேலம்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரள மாநிலத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஐதராபாத்-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் - 07119) ஐதராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.15 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் இன்று (செவ்வாய்கிழமை) சென்றடைகிறது.

இதேபோல் மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07120) வருகிற10-ந் தேதி திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 11-ந் தேதி காலை 9.02 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது.

மைசூர்-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06201) நாளை(புதன்கிழமை) மதியம் 12.15 மணிக்கு மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு சேலம் வந்தடைந்து. பின்னர் நாமக்கல், கரூர், மதுரை, திருநெல்வேலி வழியாக 8-ந் தேதி திருவனந்தபுரம் சென்றகிடைகிறது.

மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-மைசூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06202) நாளை மறுதினம்(வியாழக்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு இரவு 1.35 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் இந்த ரெயில் 9-ந் தேதி மைசூர் சென்றடைகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மேலும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story