சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு


சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போல திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதைப்போல ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story