கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகாளய அமாவாசை

நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் குளத்தில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

சந்தானராமர் கோவில்

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லெட்சுமணர், அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே சாத்தனூரில் உள்ள வெங்கட்ரமணசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, சாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டை ரங்கநாதபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ரங்கநாதர், மகாலட்சுமிக்கு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story