அஞ்செட்டி அருகேவிவசாயிக்கு கத்திக்குத்து


அஞ்செட்டி அருகேவிவசாயிக்கு கத்திக்குத்து
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் நாகபூசணம் (வயது 55). விவசாயி. இவருடைய வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நேற்று முன்தினம் நீலகண்டன் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டார். அப்போது நாகபூசணம் வீட்டின் மீது டிராக்டர் உரசியது. இதில் வீடு சேதமடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து நாகபூசணம், நீலகண்டனிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நீலகண்டன், கத்தியால் நாகபூசணத்தை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் நீலகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story