17-ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில குழுக் கூட்டம்


17-ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில குழுக் கூட்டம்
x

நாகபட்டினம், திருப்பூர் மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் நாளை மறுதினம் (17.03.2024) மற்றும் (18.03.2024) திங்கட்கிழமை சென்னை தி.நகர், செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் டி.ராஜா, தேசிய செயலாளர் தோழர் டாக்டர் கே. நாராயணா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், 39 தொகுதிகளின் தேர்தல் - பொறுப்பாளர்கள் தேர்வு, நாகபட்டினம், திருப்பூர் மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் தொடர்பான பணிகள், தேர்தல் நிதி வசூல், தேர்தல் தொடர்பான இதரப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story