தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை


தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2023 12:45 AM IST (Updated: 22 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:-

கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கீழ்வேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். 26-ந் தேதி முதல் தலைக்கவசம் அணியாமல் வரும் பணியாளர்களின் வாகனங்கள் அலுவலக வளாகத்தில் நிறுத்த அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வெளியேற்றப்படும். மேலும் தலைக்கவசம் அணியாத பணியாளர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story