சிதம்பரத்தில் திருடுபோன வேன் மீட்பு


சிதம்பரத்தில் திருடுபோன வேன் மீட்பு
x

சிதம்பரத்தில் திருடுபோன வேன் மீட்கப்பட்டது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான வேனை சிதம்பரம் காந்தி சிலை அருகே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர், நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு இதுபற்றி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் காரைக்கால் அருகே வேன் சென்று கொண்டிருப்பதாக பிரபுவிற்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் பிரபுவின் ஆதரவாளர்கள் விரைந்து சென்று காரைக்கால் அருகே டி.ஆர்.பட்டினத்தில் வைத்து வேனை மடக்கினர். அப்போது வேனை ஓட்டிச் சென்ற நபர் வேனில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து பிரபுவின் ஆதரவாளர்கள் வேனை மீட்டு சிதம்பரத்துக்கு கொண்டு வந்தனர்.


Next Story