விஷம் குடித்து மாணவி தற்கொலை


விஷம் குடித்து மாணவி தற்கொலை
x

விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி தாலுகா வல்லவாரி இடைவிரியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வீரைய்யா. இவரது மகள் விவேகா (வயது 18). இவர், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார். விவேகாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விவேகா பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு இன்று காலை கல்லூரிக்கு வந்தார். அப்போது கல்லூரியில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே விவேகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆவுடையார்ேகாவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story