மின்சாரம் தாக்கி மாணவன் சாவு


மின்சாரம் தாக்கி மாணவன் சாவு
x

மகராஜகடை அருகே தண்ணீர் தொட்டியில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

பள்ளி மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள பி.சி.புதூரை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் விக்னேஷ் (வயது 13). இவன் மகராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் நேற்று முன்தினம் எம்.சி.பள்ளி கூட்ரோடு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் தொட்டியில் குளித்து கொண்டு இருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பி அறுந்து தண்ணீர் தொட்டியில் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி மாணவன் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து மகராஜகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டியில் குளித்தபோது மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story