ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு


ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு
x

வேப்பனப்பள்ளி அருகே குளிக்க சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலியானான்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

10-ம் வகுப்பு மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த இடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவருடைய மகன் தேஜஸ் வர்மா (வயது15), வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த மாணவன் தேஜஸ் வர்மா, நேற்று மதியம் தன்னுடைய நண்பனுடன் மார்க்கண்டேய நதியில் குளிக்க சென்றார்.

ஆற்றில் மூழ்கி சாவு

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தேஜஸ்வர்மா தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்டு அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். தேஜஸ்வர்மாவை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து வந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.


Next Story