கொல்லிமலையில் கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி


கொல்லிமலையில்  கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
x

கொல்லிமலையில் கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

பள்ளி மாணவர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் திருப்புலி நாடு ஊராட்சி ஊர்புறம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 46). விவசாயி. இவருடைய மகன் புருஷோத்தமன் (15). இவர் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் புருஷோத்தமன் நேற்று முன்தினம் ஊர்புறம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றார். சுமார் 40 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் நண்பர்கள் குதித்து குளித்து மகிழ்வதைக் கண்ட புருஷோத்தமனும் ஆர்வமிகுதியில் கிணற்றில் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து புருஷோத்தமனின் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து கொல்லிமலை செங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story