வெண்ணந்தூர் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு


வெண்ணந்தூர் அருகே  கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
x

வெண்ணந்தூர் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார்.

நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார்.

கல்லூரி மாணவர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் ஹரி (வயது 20). இவர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஹரி வீட்டில் அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார். பின்னர் அங்கு சுமார் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் அவர் குதித்தார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் இறங்கி மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஹரியை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. தகவல் அறிந்து சென்ற வெண்ணந்தூர் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குதித்து கல்லூரி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story