மாணவ-மாணவிகள் உறுதி மொழி ஏற்பு


மாணவ-மாணவிகள் உறுதி மொழி ஏற்பு
x

மாணவ-மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிரா பானு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story