அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா


அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா
x

துர்நாற்றம் வீசுவதால் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் அரசு கலைக்கல்லூரி அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுகளை சுத்திகரிக்கும்போது அதிகளவில் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதனால் அருகே அமைந்துள்ள கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர். மேலும் ஒரு சிலருக்கு வாந்தி-மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளும் ஏற்பட்டன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story