மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை

உதவித்தொகை பெற...

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளில் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளளது.

விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அனுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in/welfschemes.http#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து புதுபித்தல் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள்ளும், புதியது விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண் 044-29515942, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com ஆகும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story