கைப்பந்து போட்டியில் மாணவர்கள் வெற்றி


கைப்பந்து போட்டியில் மாணவர்கள் வெற்றி
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

கைப்பந்து போட்டியில் வடகரை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தென்காசி

கடையநல்லூர்:

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி எஸ்.வி.மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 36 அணிகளை சோ்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில் 6 அணிகள் வெற்றி பெற்றனர். இதில் 3 அணிகள் வடகரை ஜாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர்கள் சாலமோன், ஜெயா சாலமோன், இயக்குனர் அகஸ்டின் ஜோசப், முதல்வர் ஜோதி, துணை முதல்வர் கார்த்திகை கணபதி மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் ரமேஷ், சங்கர சுப்பிரமணியன், ராஜதுரை, சியாமீனா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story