தொழிலாளி திடீர் சாவு


தொழிலாளி திடீர் சாவு
x

தொழிலாளி திடீரென பரிதாபமாக இறந்தார்.

கரூர்

கரூர் மண்மங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). கூலி தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று மது போதையில் இருந்த செந்தில்குமார் வீட்டின் அருகே மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story