தொழிலாளி திடீர் சாவு


தொழிலாளி திடீர் சாவு
x

சின்னசேலம் அருகே தொழிலாளி திடீரென இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே தோட்டப்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 65) தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டின் அருகே திடீரென இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story