பொங்கல் பண்டிகையை முன்னிட்டுநாமக்கல்லில் கரும்பு விற்பனை தீவிரம்

நாமக்கல்லில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கரும்பு விற்பனை தீவிரமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட கரும்பு விற்பனை சற்று குறைவாக இருப்பதாகவும், நாளை (இன்று) விற்பனை அதிகரிக்கும் என கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.இதேபோல் போகி பண்டிகையை முன்னிட்டு ஆவாரம் பூ, பூலாம் பூ மற்றும் வேப்பிலை விற்பனையும் ஜோராக நடந்ததை காணமுடிந்தது. நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஆவாரம்பூ மற்றும் பூலாம் பூ கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





