சிறுவாச்சூரில் காதல் தோல்வி- வாலிபர் தற்கொலை


சிறுவாச்சூரில் காதல் தோல்வி- வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2023 8:00 PM GMT (Updated: 13 Jun 2023 12:22 PM GMT)

சிறுவாச்சூரில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்

சேலம்

தலைவாசல்

அரியலூர் மாவட்டம் தண்டலை அருகே வடவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் மணிவேல் (வயது 26). இவர் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரிடம், நெல் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி நடராஜனுக்கு நெல் அறுவடை எந்திர டிரைவர் மணிவேல் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், காதல் தோல்வியால் தான் விஷம் குடித்து விட்டேன் எனக்கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், மணிவேல் இருக்கும் இடத்தை கண்டறிந்து அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆத்தூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story