பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய போலீஸ் சூப்பிரண்டு


பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:45 PM GMT)

நாகை அருகே பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உணவு பரிமாறி அவர்களுடன் கலந்துரையாடினார்.

நாகப்பட்டினம்


நாகை அருகே பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உணவு பரிமாறி அவர்களுடன் கலந்துரையாடினார்.

மிலாடிநபி

நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த கீழக்கரையிருப்பு கிராமத்தில், பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் என்று சொல்லக்கூடிய நாடோடி இன பழங்குடியினரின் முதல் தலைமுறை குழந்தைகளுக்கான வானவில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை 120 மாணவர்களும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 50 மாணவர்களும் என 170 மாணவர்கள் இலவசமாக தங்கி கல்வி கற்று வருகின்றனர். மிலாடி நபியையொட்டி இப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உணவு பரிமாறிய சூப்பிரண்டு

அதன்படி நேற்று அப்பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் பள்ளி குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை போலீஸ் சூப்பிரண்டிடம் சொல்லி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story