தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x

சட்டசபையில் 19-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதன் பின்னர் 3 நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி பொது பட்ஜெட்டும், 20-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. காலவரையின்றி தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.


Next Story