தமிழ்நாட்டில் 7 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் 7 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
x

தமிழ்நாட்டில் 7 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில குற்ற ஆவண காப்பக போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் சென்னை தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். சென்னை தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆரோக்கியம் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு-3-ன் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு 3-ன் துணை கமிஷனர் ஸ்டாலின் சென்னை மத்திய குற்றப்பிரிவு 1-ன் துணை கமிஷனராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை மத்திய குற்றபிரிவு 1-ன் துணை கமிஷனர் நாக ஜோதி மாநில குற்ற ஆவண காப்பகத்தின் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். சேலம் நகர துணை கமிஷனர் (தெற்கு) ராஜேந்திரன் கோவை நகர போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

கோவை நகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் சேலம் நகர துணை கமிஷனர் (தெற்கு) இடம் மாற்றம் செய்யப்பட்டார்.


Next Story