பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை சார்பில் புதிய திட்டம் - டிஜிபி அறிவிப்பு


பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை சார்பில் புதிய திட்டம்  - டிஜிபி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 2:54 PM GMT (Updated: 20 Jun 2023 3:10 PM GMT)

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை,

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில் ,

இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை!

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112 , 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும் .

அணைத்து நாள்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த சேவை இலவசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story