ஆருத்ரா நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - தமிழக அரசு


ஆருத்ரா நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - தமிழக அரசு
x

ஆருத்ரா நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் ஆதாரங்களுடன் மனுக்களை அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆருத்ரா நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் பணத்தை திரும்ப பெறுவது தொடர்பாக முறையிடுவதற்காக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் சிங்காரவேலர் மாளிகையின் 4-வது தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது.

வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், 20-ந் தேதி திருவள்ளூர் மாவட்டம், 21-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம், 26-ந் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆருத்ரா நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை கண்ணப்பர் திடல், ராஜா முத்தையா சாலை, வார்டு எண்.58-ல் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் மனுக்களை அளிக்கலாம்.

இதேபோன்று இதர மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் மனு அளித்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story