இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

போச்சம்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி

காதல் திருமணம்

போச்சம்பள்ளி அருகே உள்ள குண்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சலபதி (வயது 27). லாரி டிரைவர். இவர் வெளிமாவட்டங்களுக்கு லாரிகளில் லோடுகளை ஏற்றி செல்வது வழக்கம். அப்போது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அபிசல் மியா (25) என்பவருடன் சலபதிக்கு காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அபிசல் மியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்காததால் கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அபிசல் மியாவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 7 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story