கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி
ஊட்டி
ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்தினி தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் எட்டின்ஸ் சாலை பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






