கஞ்சா பாக்கெட்டுகளுடன் வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் கஞ்சா பாக்கெட்டுகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் அல்லிக்கண்மாய் சுடுகாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது 23 பாக்கெட்டுகளில் தலா 3 கிராம் எடையுள்ள 70 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவை சேர்ந்த முத்து மகன் நவீன்குமார் (வயது 19) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





