வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் பாலாஜி (வயது 26). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி இதேபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.